வினோத பொருட்கள்

"ஜப்பானில் தான் இது நடக்கும்" என கூறி நண்பரிடமிருந்து ஒரு ஈ மெயில் வந்தது.. அது இதோ உங்களின் பார்வைக்கு..

காதலன் இல்லாமல் தூங்க முடியவில்லையா? உங்களின் கவலை தீர்க்க இதோ..


என்னது மூக்கு ரொம்ப ஒழுவுகிறதா.. எவ்வளவு கைக்குட்டை எடுத்து செல்வது என புலம்புபவரா நீங்கள்... உங்களுக்காக

இந்த மழை நான் புது செருப்பு போட்டு செல்லும்போதுதான் வரணுமா.. அவ்வளவுதான் என் செருப்பு என வருந்துபவரா..


என்னது உங்கள் அருமை குழ்ந்தை காலை ரொட்டி சாப்பிட அடம் பிடிக்கிறதா.. உங்கள் கவலை தீர்க்க..


அவசரமாக ஆபீஸ் போகணும். சாப்பிடாமலும் போக முடியாது ஆனா இந்த உணவு இப்படி கொதிக்கிறதே.. அதுதானே உங்கள் கவலை.. உங்களுக்காக இதோ..



இந்த ட்ரைனில் போகும் நேரமாவது துங்கலாம் என்றால் இப்படி ஆடி ஆடி பக்கத்தில் உள்ளவரின் மேல் விழுந்து விடுவோமோ.. உங்கள் கவலை தீர்க்க







உங்கள் பிரட்டின் மேல் பட்டர் எளிதில் தடவ..


ஆமாம் உங்களுக்கு பிடித்த பொருள் எது..??



சோயா பீன் சாப்பிடுபவர்களுக்கு உயிர் அணு குறையும்


கேன்செர் உருவாவதை தடுக்கும்னும், உயர் அழுத்தத்தை கட்டுப்படுத்தும்னும் கூவி கூவி வித்ததாலே நான் என் உணவில் சோயா பீன் உணவை பெரும்பாலும் சேர்த்து சாப்பிடுவேன்..


ஆனால் அதுக்கு மணி அடிக்கிற மாறி அமெரிக்காவிலே ஒரு ஆராய்ச்சி செய்திருக்கானுவோ.. அது என்னன்னா..


சோயா பீன் சாப்பிடுபவர்களையும் சாப்பிடுபவர்களையும், சாப்பிடதவர்களையும் அவர்களின் உயிர் அணுவை (Sperm) எடுத்து சோதனை செய்திரிக்கானுவோ.. (பாருங்க இவங்களின் வேலையை..) முடிவு என்ன ஆச்சின்னா சோயா பீன் சாப்பிட்டவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கை சோயா பீன் சாப்பிடதவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்ததாம்.. மேலே சோதிச்சதிலே, சோயா பீனில் பெண்களுக்கான செக்ஸ் ஹார்மோன் "ஈஸ்ட்ரஜன்" (Oestrogen) அதிகமாக இருந்தது தெரிய வந்ததாம்.


ஒரு ஆண்மகனுக்கு உயிர் அணுவின் எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டருக்கு 80 முதல் 120 மில்லியன் இருக்கும். 20 மில்லியனுக்கு குறைந்தால் அவர் மூலம் வாரிசு உண்டாகுவது கடினம்..


இந்த சோயா பீனானது இந்த உயிர் அணுக்களின் எண்ணிக்கையை குறைக்க வல்லதாம்.. ஆக அதிகம் சோயா பீன் சாப்பிட்டால் அவ்வளவுதான் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்..
ஆண்மகன்களே உசாரயிருங்கள். இல்லன்னா குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை இல்லாமலே, எல்லாம் முடிந்து விடும்..

எப்படி எல்லாம் பீதியை கிளப்புறாங்கப்பா..
இனிமேல் நான் சோயா பீன் சாப்பிடுவேன்..??
பாவம் இந்த சோயா பீன் கடைகள்..


குழந்தையின் அசாத்தியமான டான்ஸ்

குழந்தைகள் ஒரு டேப் ரெகார்டர் மாதிரி. பார்க்க கூடிய கேட்கக்கூடிய விசயங்களை திரும்ப செய்து காட்டி விடுவர். அவர்களை அழகிய முகம் பார்க்கும் கண்ணாடி எனவும் கூறலாம். அதனால் தான் குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் சிறிய சச்சரவில் கூட ஈடுபட கூடாது எனலாம்.

இங்கு பாருங்கள் ஒரு குழந்தை செய்யும் லூட்டிகளை. அவன் அடிக்கும் பல்டி என்ன.. ஆடும் டான்ஸ் என்ன. மனதை கொள்ளை கொண்டு விடுகிறான்.


கொத்து கொத்தாய்...

வாழைக்கொத்து பார்த்திருக்கிறீர்களா? இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்.



கொஞ்சம் பொறுமையாக கீழுள்ள படத்தை கொஞ்சம் பாருங்கோ.. அப்புறம் தெரியும் இதில் என்ன புதுமை என்று.. பாருங்கள் அதிசயத்தை கொத்து மரத்திலிருந்து பூமி வரை எப்படி வளர்ந்துள்ளது என்று...



படத்தை அனுப்பிய சகோதரர் சித்திக்குக்கு நன்றி.

அமெரிக்காவின் தனிமை சிறையில் வாடும் ஒரு இந்தியர்

நேற்று இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை பார்த்தேன். அதை பாங்குடன் நடத்தும் "ரமேஷ்" என்பதிலிருந்து ரோஸ் ஆக மாறியவருக்காக அல்ல அதில் எடுத்துக்கொள்ளப்படும் Controversy விஷயங்கள். Anyway அந்த நிகழ்ச்சிக்கு நான் பரம விசிறி.
நேற்றைய நிகழ்ச்சியில் நாகர்கோவிலிருந்து அமெரிக்கா சென்ற ஆனந்த் ஜோன்ஸ் என்பவரை பற்றி பேசப்பட்டது. ஆனந்த் அங்கு ஒரு மிக சிறந்த Fashion Designer (அலங்கார நிபுணர்!!) . ஹாலிவூட் நடிகைகள் பலருக்கும் ஆடை வடிவமைத்த இளம் நிபுணர். அவர் இப்பொழுது அமெரிக்காவின் தனிமை சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். அவர் மேல் சாற்றப்பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒன்றன் பின் ஒன்றாக சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்களால் குற்றம் சாற்றப்பட்டுள்ளார். இதில் சில பேர் 18 வயதிற்கும் கீழே உள்ளவர்களும் அடங்கும்.

அங்கு ஒரு இந்தியர் முன்னேறுவது தாங்காமல் தான் அவர் மேல் போலி குற்றம் சாற்றப்பட்டிருப்பதாகவும்,trial கூட இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக தனிமை சிறையில் ஒரு போர்வை கூட இல்லாமல் வாடுவதாக அவரது அக்காள் சஞ்சனா ஜோன்ஸ் கண்கலங்க அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

எது எப்படியோ, அவர் குற்றம் செய்தவரோ இல்லையோ, தனி மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சீக்கிரம் அவர் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு ஒரு நல்ல முடிவு வர வேண்டும். மேலும் சஞ்சனா கூறுவது போல் நிற துவேசம் இருக்குமேயானால் அதை கழைய அந்த அரசு முயல வேண்டும் என்பதே எல்லோரின் அவா.

கம்பெனி கார்

வேலை பார்க்கும் எல்லோருக்கும், பல வித கனவுகள்.
அழகிய வீடு, போயி வர சொகுசு கார் என பல..

அதுவும் அந்த கார் ஒரு மெர்செடெஸ் பென்ஸ் காராக இருந்தால்..

அதில் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள இன்டர்நெட் வசதியுடன் ஒரு லாப் டாப் இருந்தால்..



கொஞ்சம் இளைப்பாற...


நண்பர்களுடன் கதை பேச, கான்பிரன்ஸ் வசதி ...

நண்பிகளுடன் முக்கியமான கம்பெனி விஷயம் (!) மட்டுமே பேச வசதி..



நிறுத்துங்கள் உங்கள் பகல் கனவை..

கிடைத்ததை வைத்து சந்தோசப்படுங்கள்..



அரிசி விலை ஆகாயத்தை நோக்கி

எங்கும் விலைவாசி ஏற்றம், எதிலும் ஏற்றம் என்பது வாடிக்கையாகி விட்டது. பணக்காரர்களுக்கு கவலை இல்லை. எதையும் எந்த விலை கொடுத்ததும் வாங்கி விடலாம். ஆனால் இந்த நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும்தான் இதனால் மிகவும் வருந்தவேண்டிய நிலையில் உள்ளனர்.

மற்ற பொருள்களை விடுவோம். அத்தியாவசிய பொருள்களான அரிசி கூட யானை விலை, குதிரை விலையில் விற்கிறது. இதை ஒட்டி சகோதரர் சித்திக் ஈ மைலில் அனுப்பிய கார்ட்டூன். நீங்கள் என்ன இதை பற்றி நினைக்கிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் சொல்லலாமே..