மதியம் வியாழன், மார்ச் 5, 2009

புகைப்படமும் புது கவி பாடும்.

புகைப்படம் எடுப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒன்றி விட்ட ஒன்று.


நான் சிறுவனாக இருந்த பொழுது புகைப்படம் எடுக்கணும் என்றால் "மொட்டை மாடிக்கு போங்கடா அங்குதான் நல்ல வெளிச்சம் வரும்" என்று அம்மா சொல்வார்கள். ஏனென்றால் அந்த கேமராவில் பிளாஷ் வசதி கிடையாது. இத்தனைக்கும் அது ஒரு சிங்கப்பூர் கேமரா.

அந்த காலமெல்லாம் போய் இப்பொழுது வண்ணமயமாக கை அடக்க கேமரா எல்லாம் புழக்கத்தில் வந்து விட்டது.

மேலும் அதனை கொண்டு கவிதை பாட வைக்கும் புகைப்படங்கள் எல்லாம் எடுக்கிறார்கள். இதோ சாம்பிள்.


நான் எங்கு சென்றாலும் நீ என்னோடு தான்



ஏனென்றால் உன்னிடம் உள்ளது தீ..


நீ முகத்தை மறைத்தாலும் உன் உருவம் என்றும் மறையாது.


சூரியன் சுட்டு விடும் தூரம் தான்.

அப்படி இருக்க உன்னை காண இதோ நான் சிறகடித்து பறக்கிறேன்.



உன்னை நேரிலும் இப்படி ... (சென்சார் செய்யப்படுகிறது..)


2 நண்பர்கள் பூசை செய்றாங்கோ:

Flower Power said...

Very nice photos with the comments.

பூக்காதலன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
(கவிதை. கவிதை..)