அதிசய விளம்பர யுக்தி.

விளம்பர யுக்திகள் பற்பல. இதோ ஒரு அருமையான யுக்தி.
எப்படி இவர் இவ்வாறு உடகாத்திருக்கிறார்? உங்களுக்கு தெரிகிறதா?
சொல்லுங்கள் பார்ப்போம்.

குழந்தைகள் பலவிதம்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும்.
சில குழந்தைகள் அம்மாவின் துணியை பிடித்க்க்கொண்டுதான் தூங்குவார்கள்.
மற்றும் சில தூங்குவதர்க்காகவே ஒரு சிறு தலையணை வைத்திருப்பார்கள். அதை அணைத்துக்கொண்டு தூங்கினால்தான் அவர்களுக்கும் தூக்கமே வரும்.
அதுபோல் தான் இந்த குழந்தையும்..

அப்படி என்னதான் செய்கிறது?
நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படியே உங்கள் எண்ணங்களையும் தெரிவிக்க மறந்து விடாதீர்கள்.


ரங்கமணி சுந்தரம் பத்தி உனக்கு தெரியுமா?


இன்னைக்கு ஒரு அவசியமாக தெரிஞ்சுக்க வேண்டியதை பற்றி கொஞ்சம் பேசுவோமா? ஏண்டா, எல்லாரும்தான் இப்படி சொல்லி அறுக்கிரானு இங்கு வந்தால் நீயுமாடா என்று கேட்க்காதீங்கோ. தொடர்ந்து படிங்க..




நாமெல்லாம் எத்தனயோ விஷயத்தை மும்முரமாக செய்து முடிப்போம். ஆனால் முக்கியமான விஷயம் நம்மை விட்டு போவது தெரியாது. காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டியது தான். அதுக்காக சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமல் இருக்க கூடாது.

இப்ப என்னதான் சொல்ல வர்ற என்று கட்டை தூக்காதீங்கப்பா. இதோ இந்த ஜோக்கை படிங்க எல்லாம் புரியும். (அனுப்பிய சகோதரர் சித்திக்கிற்கு நன்றிங்கோ)

ராஜன்: ரவி, நான் கடந்த 6 மாதமா இரவு வகுப்பிற்கு போறேன் தெரியுமோ? அடுத்த மாதம் தேர்வு கூட வருது.
ரவி: ஓஹோ அப்படியா..

ராஜன்: ஒன்ன்னு கேட்குறேன் சொல்லு, தாமஸ் ஆல்வா எடிசன் யாருன்னு?
ரவி: அல்வா தெரியும். யாரு அந்த ஆல்வா?
ராஜன்: என்ன நீ? அவர்தான் மின்சார விளக்கை கண்டு பிடிச்சவரு. நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

அடுத்த நாள்:
ராஜன்: ரோவ்லிங் யாருன்னு தெரியுமா உனக்கு?
ரவி: தெரியாது.
ராஜன்: அவர்தான் இந்த குழந்தைங்கல்லாம் விரும்பி படிக்குதே அந்த ஹேரி பாட்டர் என்ற நாவலை எழுதியவர். நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

அடுத்த நாள்:
ராஜன்: டான் பிரவுன் யாருன்னாவது தெரியுமா?
ரவி: தெரியாது.
ராஜன்: ஐயோ ஐயோ இது கூட உனக்கு தெரியலையே, நீயெல்லாம் என்ன பண்ண போற. அவர்தான் டாவின்சி கோடு என்ற துப்பறியும் நாவலை எழுதியவர். நீயும் என்னை மாதிரி இரவு வகுப்புக்கு வந்திருந்தீன்னா, உனக்கும் இது தெரிஞ்சிருக்கும்.

ரவி கடுப்பாக: அது சரி ரங்கமணி சுந்தரம் பத்தி உனக்கு தெரியுமா?
ராஜன்: (சிறிது யோசிச்சு விட்டு) தெரியாது.
ரவி: அவர்தான் உன் பொண்டாட்டிகூட நீ இல்லாத சமயம் சுத்தறவர். நீ இரவு வகுப்பிற்கு போகாமல் இருந்தால், உனக்கு அது தெரிஞ்சிருக்கும்.




இப்ப தெரியுதா நான் என்ன சொல்றேன்னு. பாத்து நடந்துக்கிங்கப்பா.

அட்ராடா நாக்க முக்க..

(டிஸ்கி: என்ன புது பதிவே இல்லை என்று உரிமையோடு ஈமெயில் அனுப்பிய தம்பி சித்திக்கின் வேண்டுகோளை ஏற்று)

சின்ன வயசிலே, "உன்னாலே (உன்) நாக்கால் (உன்) மூக்கை தொட முடியுமா?" என்று கேட்பதும், கேட்க்கப்படுவதும் - அதற்காக சற்றும் தளரா விக்கிரமாதித்தன் போல் பல முயற்சி செய்வதும் உண்டு. என்னதான் முயன்றாலும் மூக்கை கொஞ்சமாவாது அழுத்தினால்தான், அதன் நுனியையாவது தொட முடியும்.

ஆனால் ஜெர்மனியில் ஹாம்பார்கு (Hamburg) அருகே வசிக்கும் இந்த 12 வயது சிறுமியோ வெகு இலகுவாக தன் நாக்கால் மூக்கை மட்டுமல்ல, நெற்றியையே தொட்டு விடுகிறார். ஆம் இந்த கின்னஸ் சாதனை படைத்த இவரது நாக்கின் நீளம் 7 cm.


சாதாரணமாகவே பெரும்பாலான பெண்களை அதிகம் பேசுவதால் "உனக்கு வாய் ரொம்ப நீளம்" என்று கூறுவதுண்டு. ஆனால் இவரிடம் கொஞ்சம் மாற்றி "உனக்கு நாக்கு ரொம்ப நீளம்" என்று சொல்வார்களோ.

ஹையோ ஹையோ. இது என்ன சின்னப்புள்ளை தனமா இருக்கு என்றெல்லாம் கேட்க்க கூடாது.

அமெரிக்க குழந்தையும், ஆப்பிரிக்க டீவியும்

டிஸ்கி: ஏன்பா.. எப்பொழுதும் ஜாலி பதிவு தானா? கொஞ்சம் சீரியஸா எழுதக்கூடாதா என்று கேட்ட என் வலையுலக நண்பர்களுக்கு இது சமர்ப்பணம்.

உங்களை சுற்றி பாருங்கள். (சுத்தி இல்லப்பா..) எங்கு பார்த்தாலும் பொருளியல் சுருங்கி விட்டது. வேலைகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இருக்கும் வேலைக்கே ஆபத்து என கூக்குரல்கள்.

உலகத்தில் நடப்பதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியல்லைன்னாலும், பொருளியல் தாக்கத்தினால் ஏற்படும் இந்த சுனாமியிலிருந்து எப்படி பாது காத்து கொள்ளோணும் என்பது நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சமாச்சாரம். இல்லையென்றால் மன உளைச்சலும் அதனால் ஏற்படும் நோய்களும் தான் மிச்சம். வருமானமே குறைவாக உள்ள இந்த கால கட்டத்தில், டாக்டருக்கு வேறு அழனுமா என்ன?

சரி சரி என்ன செய்யலாம் சொல்லு என்றுதானே கேட்க்குறீங்க.. இதோ பிடியுங்கள் முத்துக்கள் மூன்று.

1. தேவைகளை குறைத்து கொள்ளணும். தேவைகளே குறைக்க சொல்லும் போது ஆசைகளை பத்தி யாருப்பா அங்கே பேசுறது.. மூச்..

2. வரவுக்கேத்த செலவு என்பதை மாற்றி வரவின் பாதி தான் செலவு என்று மாற்றிகொன்று வாழ வேண்டும். 10 டாலர் சம்பாதித்தால், 5 டாலர் தான் செலவு செய்யோணும். மீதியை பற்றி பேச கூடாது. பத்திரமா அதை வங்கியில் போடலாம். கஷ்ட காலத்தில் உதவும்.

3. முக்கியமாக எது செய்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளை குடும்பத்தில் நன்கு விளக்கி (யாருப்பா அது சோப்பு தூள் தேடுறது..) அவர்களின் ஆதரவோடு செய்யனும்.

இதெல்லாம் கடை பிடித்தால், இந்த பிரச்சினையெல்லாம் நமக்கு ஜுஜுபீ.

இந்த நேரத்தில் பொருளியல் மோசத்தை கூற ஒருவர் கூறியதை இங்கு கூறனும்.

"பொருளியல் மிகவும் மோசம் எப்படின்னா -
அமெரிக்க குழந்தையை தத்து எடுத்துக்கோங்க என்று
ஆப்பிரிக்க டீவியில் விளம்பரம் வருகிறது"

உயிரை காப்பற்றிய மார்பு கச்சை..

Under wire bra

பெண்களுக்கு மார்பு கச்சை (Bra) அத்தியாவசியமான ஆடைகளில் ஒன்று. தேவைக்கு என்று ஆரம்பித்த இது இப்பொழுதெல்லாம் அலங்கார பொருட்களில் ஒன்றாகிவிட்டது.

வித விதமான கச்சைகள் இப்பொழுது காலத்திற்கேற்ப தினம் தினம் பல்வேறு உருவில் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி சாதரணமாக உள்ள ஒன்று ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் இது நடந்தது யூ எஸ்சில் உள்ள டெட்ராய்ட்(Detroit) என்ற நகரில். அங்குள்ள 57 வயது பவுச்டினா கிரீன் (Faustina Green) என்ற மாது தமது பக்கத்து வீட்டில் 3 இளைஞர்கள் அத்து மீறி நுழைவதை கண்டார்.

கொள்ளையர்கள் தங்களது இலக்கை வெற்றிகரமாக முடித்து விட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது, அந்த மாது தங்களை பார்ப்பதை அறிந்த கொள்ளையர்களில் ஒருவன் அந்த மாதின் மார்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால் அந்த குண்டு அவரை சிதைக்காமல் அவரின் மேல் பட்டு விலகி சென்றது (இங்கு நடிகர் விஜயகாந்த் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல) .

கொள்ளை செய்தி அறிந்த வந்த காவலர்கள் இந்த செய்தி அறிந்து விசாரிக்க அவர் அணிந்து இருந்த மார்பு கச்சை தான் அவரின் உயிரை கைப்பற்றியதை அறிந்தார்கள். இதை பற்றி மேலும் கூறிய அந்த காவலர்கள் அவர் அணிந்து இருந்தது அண்டர் வயர் மார்பு கச்சை (Under wire) என்று அதில் உள்ள அந்த வயர்தான் குண்டை தடுத்தது என்றும் கூறினார்கள்.

இதை அறிந்த அங்குள்ள மக்கள் "அது நிச்சயமாக ஒரு அற்புதமான மார்பு கச்சைதான். இனிமேல் நாங்கள் இந்த வகை கச்சை தான் வாங்க போகிறோம்" என்று கூறினார்களாம்.

ஆக மார்பு கச்சை மானத்தை மட்டும் அல்ல, உயிரையும் காப்பாற்றும் என்பதை இங்கு உரக்க கூவிக்கொள்கிறேன்.

ஆமாம் கமெண்டு கூட போடாமல், அப்படி எங்க நீங்க அவசரமாய் போறீங்க? என்னது அண்டர் வயர் மார்பு கச்சை வாங்கவா?

நல்லா இருங்கப்பூ.

தட்டி கொடுத்த குங்குமத்திற்கு நன்றி.


அன்புத்தாயின் தீடீர் மறைவு என்னை நிலை குலைய வைத்தது. எப்பொழுதும் கும்மாளம், கிண்டல் கேலி என வாழ்க்கையின் சந்தோசங்களை அணு அணுவாக ருசித்த எனக்கு இது ஒரு மிக சிறந்த "Wakeup call" . இதனால் வலை உலகத்திற்கு கூட வராமல் இருந்து வந்தேன்.

என்னை தேடி இவ்வலை தளத்திற்கு வந்து ஏமாந்த அன்பு நெஞ்சங்கள் என்னை மன்னிப்பார்களாக. (யாரது அங்கே "இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தோம்" என குரல் கொடுப்பது")

இந்த நேரத்தில் எனது "தொண தொணக்கும் மனைவியை விற்க நினைத்தவர்" என்ற பதிவு சமிபத்திய குங்குமம் இதழில் வந்துள்ளது.

என்னை போன்ற சாதாரண பதிவர்களையும் அங்கீகரித்த குங்குமத்திற்கு என் இதயம் கனிந்த நன்றி. தளர்ந்த மனதிற்கு சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட சிறந்த டானிக்.
குங்குமத்தில் பூக்காதலன்

முதல் பகுதியிலேயே இடம் பிடித்த என் சக பதிவர்கள் சுறு சுறுப்பாய் பல சுவையான பதிவுகளை தரும் நண்பர் சோம்பேறி மற்றும் வலை உலகங்களால் "அண்ணாச்சி" என அன்புடன் அழைக்கப்படும் வடகரை வேலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அவங்களுக்கு முன்னால் நானெல்லாம் ஒரு ஜுஜுபீ.