யோகா கற்பிக்கும் சிறுவன்

பல வித நோய்களையும் கட்டுக்குள் வைக்கும் ஒரு அறிய பயிற்ச்சி, நம் முன்னோர்கள் அறிமுகப்படுத்திய "யோகா".

உடற்பயிற்ச்சி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நான், யோகா பயிற்சியின் போது அந்த பயிற்ச்சிகளை சரி வர செய்ய இயலாமல் கஷ்டப்பட்டதும் (சும்மா சொல்ல கூடாது எங்கள் வகுப்பில் எல்லோருமே கஷ்டப்பட்டோம்), ஒரு சிறுவன் எல்லா ஆசனங்களையும் அழகாக செய்ததும் ஞாபகம் வருகிறது.

அப்படி சிறந்த முறையில் செய்யும் ஒரு சிறுவனே வகுப்பு ஆசிரியராய் வந்தால்..

மயக்கும் இறகு ஓவியங்கள்

பறவைகள் பார்க்க பார்க்க திகட்டாதவை. அதற்கு முக்கிய காரணமாக விளங்குபவை அதன் அழகிய சிறகுகள். உதிர்ந்து கிடக்கும் அவற்றை "பொக்கிசமாக" சிறுவயதில் பாதுகாத்து வந்தது ஞாபகம் வருகிறது.

அப்படி சாதாரணமாக கிடக்கும் சிறகுகளே அழகாக இருக்கும் போது, அதில் அழகுக்கு அழகு சேர்த்தால் போல் வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்தால், அட அட நினைத்தாலே இன்பமாக உள்ளது அல்லவா?

பார்த்து மகிழுங்கள். கண்ட பின் தாங்கள் இன்ஸ்டன்ட் தத்துபித்து கவிஞர் ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல.


அமெரிக்காவின் தேர்தலில் உபயோகித்தால் வெற்றி நிச்சயம்.

பறவைகள், விலங்குகள் பார்க்க பார்க்க பரவசம்.

பனி கரடிகள், மீன்கள் கூட.


துரத்தும் நரிகள், உடற்பயிற்சியை வலியுறுத்தும் கரடிகள் .

குடும்ப ஒற்றுமையை எடுத்து காட்டும் பறவைகள், விலங்குகள் .


என்னது போதவில்லையா, இதோ மேலும்.

பறவைகள், விலங்குகள் சரி, மனிதர்கள் எங்கே என்று கேட்ப்பவர்களுக்காக இதோ.





அழகு ஓவியங்களை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சுரேசுக்கு நன்றி.




பதினாறும் பெற்று ...

தமிழர் திருமணங்களுக்கு சென்றால் நிச்சயமாக இந்த வாழ்த்து உங்களின் காதில் விழும். "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று.

சிறு வயதில் இப்படி வாழ்த்தை கேட்டால் "பதினாறு பிள்ளைகள் பெற சொல்றாங்களோ" என்று நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்ததுண்டு.

ஆமாம் இந்த பதினாறும் என்றால் என்ன? பதினாறு பேறு (செல்வங்கள்) என்பது மட்டும் தெரியும். ஆனால் இந்த செல்வங்கள்தான் என்ன. எனக்குள் தூங்கி இருந்த அந்த ஜேம்ஸ் பாண்டை எழுப்பி விட்டேன்.

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு போன பொது அப்படி சொல்லி மணமக்களை வாழ்த்திய ஒரு பெரியவரை பிடித்து கேட்டப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா. "பரம்பரை பரம்பரையாய் இப்படித்தான்பா வாழ்த்துறோம். முதியோர்கள் சொன்னால் நல்லதாகத்தான் இருக்கும். அதுக்கு காரியம் காரணம் எல்லாம் ஆராய கூடாது".

என்னடா இது பெரிய வம்பா போச்சு.. தெரிந்துக்கொள்ளலாம்னு கேட்டால் இப்படி சொல்லிட்டறேன்னு வருத்தம். ஆனாலும் "தனது முயற்சியிலிருந்து சிறிதும் தவறாத விக்கிரமாதித்தன் போல்" நானும் எனது ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.

அப்படி அலைந்த போதுதான், என் நண்பன் ஒருவன் திருநள்ளாறு கோவிலில் பார்த்ததாக இந்த போட்டோவை கொடுத்தான். இதில் அந்த பதினாறு செல்வங்களை பற்றியும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

பணம் பொருள்தான் செல்வம் என நினைக்கும் இந்த காலத்தில் எது உண்மையான செல்வம் என்பதை. பாருங்கள் நம் முன்னோர்கள் எவ்வளவு அர்த்தப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள் என்று..

இந்த கட்டுரைக்கு காரணமாக இருந்த சித்தி முனிராவுக்கு நன்றி.


பிக் பாக்கெட்காரர்கள் இடமிருந்து மீட்க புதிய காலனி

இந்த காலத்தில் பிக் பாக்கெட்காரர்கள் ரொம்பவும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். எவ்வளவு மறைவான இடத்தில் வைத்திருந்தாலும் அதையும் சுலபமாக லவட்டி விடுகிறார்கள். அவர்களிடமிருந்து நம் பணத்தை எப்படித்தான் பாதுகாப்பது?

அதற்கு பதில் சொல்லத்தான் இந்த புதிய செருப்பு விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் கால்பகுதியில் ஒரு அறை உள்ளது அதில் நீங்கள் மிகவும் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் பொருளை (அதற்க்காக உங்க வீட்டையெல்லாம் இதனுள் வைக்க முடியாது) இதனுள் வைத்து விட்டால் போதும். உங்கள் பொருள் பாதுகாப்பாக இருக்கும் .

முக்கியாமாக ஒன்று சொல்ல மறந்து விட்டேனே.. இதை கல்யாணத்தில் வைத்துவிட்டு காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல..


போட்டோ அனுப்பிய சகோதரர் சித்திக்கிற்கு நன்றி.


பாப்கார்ன்

கைதொலைபேசிகளின் எண்ணிக்கை (அதாங்க இந்த செல்போன்) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அது இல்லை என்றால் சிலர் வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டது போல எண்ணுகிறார்கள்.

அப்படி வாழ்க்கையின் அங்கமாகி விட்ட இந்த கை தொலை பேசிகளை எப்படி பயன்படுத்துகிறோம்? சிலர் தங்களது கைப்பையில் வைத்து கொள்கிறார்கள். பலரோ தங்களது பேன்ட் பாக்கெட்டில் முக்கியமாக ஆண்கள். பேண்ட்டில் திரியும் இந்த நவ நாகரிக மங்கைகளும் இதில் அடக்கம். வேறு சிலரோ tie மாதிரி தொங்க விட்டுக்கொள்கிறார்கள். மிகவும் அவசியமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஹே என்ன சொல்ல வருகிறாய் என்று தானே கேட்கிறீர்கள். இதோ விசயத்திற்கு வருகிறேன்.

கை தொலைபேசியிலிருந்து வரும் கதிரியக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. முக்கியமாக அது உபயோகத்தில் இருக்கும் போது. அது எவ்வளவு மோசமானது என்பதை பின் வரும் வீடியோவில் காணுங்கள்.


புதிய வேகத்தடை சாதனம்

சாலைகள் எங்க பாட்டன் வீட்டு சொத்து என்று நினைத்து தாறுமாறாக வாகனம் ஓட்டுவதும், அதனால் அன்றாடம் சாலை விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது.

அதை பல நாடுகளில் பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வேகத்தடை கேமராக்கள், சாலை போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஆகியவை இவற்றுள் அடங்கும். அப்படியும் கட்டு கடங்காமல் திரிபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அவர்களுக்கானவ வேகத்தடை சாதனம்தான் நீங்கள் இங்கே காணப்போகும் விஷயம்.


இந்த குண்டும் குழியுமான சாலையில் யாருக்காவது மின்னல் வேகத்தில் செல்ல விரும்புவார்களோ?

.

.

.

.

எவ்வளவு புதுமையான செலவு குறைந்த வழி பாருங்கள்.

அமெரிக்காவின் டாலர்

அமெரிக்காவின் பண மதிப்பு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக மெலிந்து கொண்டிருக்கும் வேளையில் அதை பற்றி சகோதரர் சித்திக் அனுப்பிய கார்ட்டுன்.

டாலருக்கே தன் நிலையை நினைத்து கவலையாக இருக்கிறதாம்.


இன நிற வேற்றுமைக்கு எதிராக ஒரு சவுக்கடி

இன வேற்றுமைக்கு எதிராக பல நாடுகளும் பல நேரங்களில் குரல் கொடுத்து கொண்டிருந்தாலும், அங்கெங்கே இன துவேசங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை எப்படி முழுமையாக ஒழிப்பது என்று பலரும் பல விதமாக முயன்று கொண்டிருக்கும் வேளையில் இதோ ஒரு அழகிய உதாரணம்.

பிரிட்டிஷ் தாயிற்கு 2000-இல் பிறந்த இரட்டை குழ்ந்தைகளை பாருங்கள். ஒன்று கருப்பு இனமாகவும் ஒன்று வெள்ளை இனமாகவும் பிறந்துள்ளதை.

தாய் தகப்பன் இருவருமே ஒரு கலப்பு திருமணத்தில் உதித்தவர்கள். (வெள்ளை இன தாய், கருப்பு இன தகப்பன்)



வினோத பொருட்கள்

"ஜப்பானில் தான் இது நடக்கும்" என கூறி நண்பரிடமிருந்து ஒரு ஈ மெயில் வந்தது.. அது இதோ உங்களின் பார்வைக்கு..

காதலன் இல்லாமல் தூங்க முடியவில்லையா? உங்களின் கவலை தீர்க்க இதோ..


என்னது மூக்கு ரொம்ப ஒழுவுகிறதா.. எவ்வளவு கைக்குட்டை எடுத்து செல்வது என புலம்புபவரா நீங்கள்... உங்களுக்காக

இந்த மழை நான் புது செருப்பு போட்டு செல்லும்போதுதான் வரணுமா.. அவ்வளவுதான் என் செருப்பு என வருந்துபவரா..


என்னது உங்கள் அருமை குழ்ந்தை காலை ரொட்டி சாப்பிட அடம் பிடிக்கிறதா.. உங்கள் கவலை தீர்க்க..


அவசரமாக ஆபீஸ் போகணும். சாப்பிடாமலும் போக முடியாது ஆனா இந்த உணவு இப்படி கொதிக்கிறதே.. அதுதானே உங்கள் கவலை.. உங்களுக்காக இதோ..



இந்த ட்ரைனில் போகும் நேரமாவது துங்கலாம் என்றால் இப்படி ஆடி ஆடி பக்கத்தில் உள்ளவரின் மேல் விழுந்து விடுவோமோ.. உங்கள் கவலை தீர்க்க







உங்கள் பிரட்டின் மேல் பட்டர் எளிதில் தடவ..


ஆமாம் உங்களுக்கு பிடித்த பொருள் எது..??



சோயா பீன் சாப்பிடுபவர்களுக்கு உயிர் அணு குறையும்


கேன்செர் உருவாவதை தடுக்கும்னும், உயர் அழுத்தத்தை கட்டுப்படுத்தும்னும் கூவி கூவி வித்ததாலே நான் என் உணவில் சோயா பீன் உணவை பெரும்பாலும் சேர்த்து சாப்பிடுவேன்..


ஆனால் அதுக்கு மணி அடிக்கிற மாறி அமெரிக்காவிலே ஒரு ஆராய்ச்சி செய்திருக்கானுவோ.. அது என்னன்னா..


சோயா பீன் சாப்பிடுபவர்களையும் சாப்பிடுபவர்களையும், சாப்பிடதவர்களையும் அவர்களின் உயிர் அணுவை (Sperm) எடுத்து சோதனை செய்திரிக்கானுவோ.. (பாருங்க இவங்களின் வேலையை..) முடிவு என்ன ஆச்சின்னா சோயா பீன் சாப்பிட்டவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கை சோயா பீன் சாப்பிடதவர்களின் உயிர் அணுவின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்ததாம்.. மேலே சோதிச்சதிலே, சோயா பீனில் பெண்களுக்கான செக்ஸ் ஹார்மோன் "ஈஸ்ட்ரஜன்" (Oestrogen) அதிகமாக இருந்தது தெரிய வந்ததாம்.


ஒரு ஆண்மகனுக்கு உயிர் அணுவின் எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டருக்கு 80 முதல் 120 மில்லியன் இருக்கும். 20 மில்லியனுக்கு குறைந்தால் அவர் மூலம் வாரிசு உண்டாகுவது கடினம்..


இந்த சோயா பீனானது இந்த உயிர் அணுக்களின் எண்ணிக்கையை குறைக்க வல்லதாம்.. ஆக அதிகம் சோயா பீன் சாப்பிட்டால் அவ்வளவுதான் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்..
ஆண்மகன்களே உசாரயிருங்கள். இல்லன்னா குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை இல்லாமலே, எல்லாம் முடிந்து விடும்..

எப்படி எல்லாம் பீதியை கிளப்புறாங்கப்பா..
இனிமேல் நான் சோயா பீன் சாப்பிடுவேன்..??
பாவம் இந்த சோயா பீன் கடைகள்..


குழந்தையின் அசாத்தியமான டான்ஸ்

குழந்தைகள் ஒரு டேப் ரெகார்டர் மாதிரி. பார்க்க கூடிய கேட்கக்கூடிய விசயங்களை திரும்ப செய்து காட்டி விடுவர். அவர்களை அழகிய முகம் பார்க்கும் கண்ணாடி எனவும் கூறலாம். அதனால் தான் குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் சிறிய சச்சரவில் கூட ஈடுபட கூடாது எனலாம்.

இங்கு பாருங்கள் ஒரு குழந்தை செய்யும் லூட்டிகளை. அவன் அடிக்கும் பல்டி என்ன.. ஆடும் டான்ஸ் என்ன. மனதை கொள்ளை கொண்டு விடுகிறான்.


கொத்து கொத்தாய்...

வாழைக்கொத்து பார்த்திருக்கிறீர்களா? இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்.



கொஞ்சம் பொறுமையாக கீழுள்ள படத்தை கொஞ்சம் பாருங்கோ.. அப்புறம் தெரியும் இதில் என்ன புதுமை என்று.. பாருங்கள் அதிசயத்தை கொத்து மரத்திலிருந்து பூமி வரை எப்படி வளர்ந்துள்ளது என்று...



படத்தை அனுப்பிய சகோதரர் சித்திக்குக்கு நன்றி.

அமெரிக்காவின் தனிமை சிறையில் வாடும் ஒரு இந்தியர்

நேற்று இப்படிக்கு ரோஸ் என்ற நிகழ்ச்சியை பார்த்தேன். அதை பாங்குடன் நடத்தும் "ரமேஷ்" என்பதிலிருந்து ரோஸ் ஆக மாறியவருக்காக அல்ல அதில் எடுத்துக்கொள்ளப்படும் Controversy விஷயங்கள். Anyway அந்த நிகழ்ச்சிக்கு நான் பரம விசிறி.
நேற்றைய நிகழ்ச்சியில் நாகர்கோவிலிருந்து அமெரிக்கா சென்ற ஆனந்த் ஜோன்ஸ் என்பவரை பற்றி பேசப்பட்டது. ஆனந்த் அங்கு ஒரு மிக சிறந்த Fashion Designer (அலங்கார நிபுணர்!!) . ஹாலிவூட் நடிகைகள் பலருக்கும் ஆடை வடிவமைத்த இளம் நிபுணர். அவர் இப்பொழுது அமெரிக்காவின் தனிமை சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். அவர் மேல் சாற்றப்பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒன்றன் பின் ஒன்றாக சுமார் இருபதிற்கும் மேற்பட்டவர்களால் குற்றம் சாற்றப்பட்டுள்ளார். இதில் சில பேர் 18 வயதிற்கும் கீழே உள்ளவர்களும் அடங்கும்.

அங்கு ஒரு இந்தியர் முன்னேறுவது தாங்காமல் தான் அவர் மேல் போலி குற்றம் சாற்றப்பட்டிருப்பதாகவும்,trial கூட இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக தனிமை சிறையில் ஒரு போர்வை கூட இல்லாமல் வாடுவதாக அவரது அக்காள் சஞ்சனா ஜோன்ஸ் கண்கலங்க அந்த நிகழ்ச்சியில் கூறினார்.

எது எப்படியோ, அவர் குற்றம் செய்தவரோ இல்லையோ, தனி மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சீக்கிரம் அவர் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவருக்கு ஒரு நல்ல முடிவு வர வேண்டும். மேலும் சஞ்சனா கூறுவது போல் நிற துவேசம் இருக்குமேயானால் அதை கழைய அந்த அரசு முயல வேண்டும் என்பதே எல்லோரின் அவா.

கம்பெனி கார்

வேலை பார்க்கும் எல்லோருக்கும், பல வித கனவுகள்.
அழகிய வீடு, போயி வர சொகுசு கார் என பல..

அதுவும் அந்த கார் ஒரு மெர்செடெஸ் பென்ஸ் காராக இருந்தால்..

அதில் நாட்டு நடப்பை அறிந்து கொள்ள இன்டர்நெட் வசதியுடன் ஒரு லாப் டாப் இருந்தால்..



கொஞ்சம் இளைப்பாற...


நண்பர்களுடன் கதை பேச, கான்பிரன்ஸ் வசதி ...

நண்பிகளுடன் முக்கியமான கம்பெனி விஷயம் (!) மட்டுமே பேச வசதி..



நிறுத்துங்கள் உங்கள் பகல் கனவை..

கிடைத்ததை வைத்து சந்தோசப்படுங்கள்..



அரிசி விலை ஆகாயத்தை நோக்கி

எங்கும் விலைவாசி ஏற்றம், எதிலும் ஏற்றம் என்பது வாடிக்கையாகி விட்டது. பணக்காரர்களுக்கு கவலை இல்லை. எதையும் எந்த விலை கொடுத்ததும் வாங்கி விடலாம். ஆனால் இந்த நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும்தான் இதனால் மிகவும் வருந்தவேண்டிய நிலையில் உள்ளனர்.

மற்ற பொருள்களை விடுவோம். அத்தியாவசிய பொருள்களான அரிசி கூட யானை விலை, குதிரை விலையில் விற்கிறது. இதை ஒட்டி சகோதரர் சித்திக் ஈ மைலில் அனுப்பிய கார்ட்டூன். நீங்கள் என்ன இதை பற்றி நினைக்கிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் சொல்லலாமே..


மாரடைப்பைத் தடுக்கும் இஞ்சி


சாப்பிடும்போது இஞ்சியை கடித்து விட்டால் அவசர அவசரமாக அதை வாயில் இருந்து வெளியில் எடுப்பவரா நீங்கள்? அப்படிஎன்றால் உடனே இந்த கட்டுரையை மேலே படியுங்கள். ஏனெனில் மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது." என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருக்கிறது.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆக இனிமேல் உங்களை யாரவது இஞ்சி தின்ற குரங்கு என்று சொன்னால் ஆத்திரப்படாதீர்கள். அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி

என்ன பூமியில் வாழ்ந்து போரடிக்கிறதா? செவ்வாய் கிரகத்திற்கு வர்றேங்களா என்று உங்கள் பயண முகவர் கேட்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. என்ன கதை உடுறான் என்று நெனைக்கதீங்கோ.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது என்பதற்கான முக்கிய ஆதாரமாக இதை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதை விரிவாக ஆராய அமெரிக்காவின் நாசா, பீனிக்ஸ் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது.பீனிக்ஸ் விண்கலம் அங்கு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. மே 25ம் தேதி பீனிக்ஸ் தரையிறங்கியபோது அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் தென்பட்டது. அது உப்பு அல்லது ஐஸ் கட்டியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதையடுத்து மேலும் 3 இடங்களில் பீனிக்ஸ் விண்கலம், மண்ணைத் தோண்டியபோது அங்கும் வெள்ளை நிறத்திலான பொருள் தென்பட்டது. தோண்டிய சிறிது நேரத்தில் இது சூரிய வெப்பத்தில் ஆவியாகி விட்டது. எனவே இது உப்போ அல்லது பாறையோ இல்லை, மாறாக ஐஸ் கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் இருக்கிறது என்பதற்கான மிக முக்கியஆதாரம் இது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதை வைத்து மட்டும் செவ்வாய் கிரகம், மனிதர்கள் வாழத் தகுதியான கிரகம் என்று கூறி விட முடியாது. உணவுப் பொருள் இல்லாத கிரகம், வாழத் தகுதியற்ற கிரகம் என்பது நாசா விஞ்ஞானிகளின் கருத்து. தொடர்ந்து ஆய்வு நடத்தி, செவ்வாய் கிரகத்தில் வேறு ஏதாவது கனிப் பொருட்கள் மறைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்யவுள்ளனர்.

செவ்வாயில் ஐஸ் கட்டிகள் இருப்பது தெரியவந்திருப்பதால், செவ்வாய் கிரக ஆய்வுகள் ஆர்வத்தை தூண்டியுள்ளன.

கொலஸ்ட்ரால் - குறைப்பது எப்படி ? - பாகம் ஒன்று


உடல் இளைக்க போரடுபவரா நீங்க..
என்ன செய்தாலும் ஒண்ணுமே பலன் இல்லையே என்று வருந்துபவரா நீங்க..
அப்படிஎன்றால் உங்களுக்காகதான் இந்த கட்டுரை
கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் என்று சொல்லறாங்களே அது என்னன்னு முதலில் பாப்போமா?

கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு குடும்பத்தை சேர்ந்த வெள்ளையான மெழுகு போன்ற பொருள். இதுதான் நமக்கு தேவையான பல்வேறு ஹார்மோன்களை (estrogen) மற்றும் வைட்டமின் D போன்ற முக்கியமான தயாரிக்க உதவுது.

ஆமா இந்த கொலஸ்ட்ரால் எப்படி வருது என்று தானே கேட்குறீங்க.
நமக்கு கொலஸ்ட்ரால் இரண்டு விதமாக கிடைக்குது.
1. நம்முடைய உடம்புலேர்ந்தே உருவாக்கப்படுது. நம் கல்லீரல் (Liver) சுமார் 1000 மில்லிக்ரம் கொலஸ்ட்ரால் ஒரு நாளைக்கு உருவாக்குது.
2. நாம் சாப்பிடும் உணவிலிருந்து.. முக்கியாமா அசைவ உணவுகள், பால், முட்டை போன்றவைகள்.

முக்கியாம ஒன்னு காய்கறிகள், பழங்கள், இதுலல்லாம் கொலஸ்ட்ரால் கிடையாது.

சரி சரி மிச்சத்தை அப்புறம் பார்ப்போமா?
பசிக்குது.. பிரியாணி சாப்பிடனும்

போலி வெப்கேம்

ஏதாவது ஒரு மெசெஞ்சரில் சாட்டிங்கில் இருக்கின்றீர்கள்.உங்களிடம் வெப்கேமே இல்லை.எனினும் மறுமுனையில் இருப்பவரிடம் உங்களிடம் வெப்கேம் இருப்பது போல் பாவ்லா காட்டணுமா? அவர் போன்றோர்க்கு உதவுவது தான் இந்த போலி வெப்கேம். Fakewebcam


இந்த மென்பொருளை நிறுவிவிட்டு பின் அதில் ஒரு போலி வெப்கேம் வீடியோவை ஓட விட்டு விட்டால் மறுமுனை மனசு அதை உண்மையென்றே நம்பிவிடுமாம். டைப்புவதில் மட்டும் அல்ல வெப்கேமில் தோன்றுபவரிலும் பொய் இருக்கலாம்.

யாராவது அழகான பெண்ணிடம் சாட் செய்கிறோம் என்று நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தால் எதற்கும் உசாராயிருங்கள். அது போலி வெப்கேமாக இருக்கலாம்.

குவைதில் புழுதி புயல்

புழுதி சுனாமி !!

வாங்கப்பா எல்லோரும் இந்த பஸ்ஸில் ஏறி ஓடி போயிடலாம்

நீங்க எல்லாம் மூக்கை மூடிக்கொங்கோ.. இதல்லாம் என்னக்கு சகஜம்பா (பாருங்க எப்படி ஸ்டைல் - ஆ போஸ் கொடுக்குறதை..)

நீங்கல்லாம் மூக்கை மூடிக்கலாம்.. நாங்க??


ஆமா இந்த புழுதியிலும் எப்படி இவங்க கார் ஒட்டி செல்ராங்க்லோ ?

ஒரு பறவை பார்வை.



நடுநிசி பயங்கரம்


நடுநிசி ஊரே வெறிச்சோடி கிடந்தது. அக்கம் பக்கம் யாருமில்லை.
பக்கத்தில் இருந்த மின்விளக்கும் இப்பொழுது அணைந்து விடுவேன் என பயமுறித்தி கொண்டிருந்தது. கண்ணனுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் தைரியமும் போய் கொண்டிருந்தது. "இந்த நேரத்தில் வெளியில் போகதடா. அப்படி போனாலும் முக்கியமாக கோயில் பக்கம் நிற்காதே" என்று அம்மா சொன்னார்.

இந்த பாழா போற வயிற்று பசி இந்த நேரத்தில்தான் வரணுமா? அதுவும் அம்மா எதாவது செய்து தரேன் என்று சொல்லியும் கேட்காமல் இவ்வளவு தூரம் வந்தேனே.. அதுவும் இந்த ஸ்டுபிட் பைக் பாதியில் இப்படி மக்கர் செய்து விட்டதே. யாராவது வந்தாலும் லிப்ட் கேட்கலாம் ஆனால் இங்கு ஈ எறும்பு கூட காணோமே என்று கவலைப்பட்டு கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து ஒரு மோட்டார் சைக்கிளில் யாரோ வருவது போல இருந்தது. நல்ல வேலை இவரிடம் எப்படியாவது லிப்ட் கேட்டு இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்து கொண்டான்.

லிப்ட் கேட்க கையை நீட்ட அந்த பைக் நின்றது. அந்த ஆள் பார்ப்பதற்கு கொடுரமாக இருந்தான். "என்ன வேண்டும்?" கொடுர குரல். என்ன செய்வது வேறு வழி இல்லை எப்படியாவது இங்கிருந்து போனால் சரி என்று அவரிடம் பேசி அவர் வண்டியில் சென்றான்.

பாதி வழியில் செல்லும் பொழுது "ஈ உம்" என்று பல்வேறு விதமான ஒலிகள் ஒட்டுபவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. சாதரணமாக வண்டியை ஒட்டாமல் நெளித்து நெளித்து வேறு வண்டி ஒட்டிக்கொண்டிருந்தான். தப்பான வண்டியில் ஏறி விட்டோமே என்று உயிரை பிடித்து கொண்டு கண்ணன் உட்கார்ந்து கொண்டிருந்தான். வண்டி கோயிலுக்கு அருகே வந்தவுடன் திடீர் என சடர்ன் பிரேக் அடித்து வண்டியை நிப்பாட்டினான். இன்று நாம் தொலைந்தோம் என்று கண்ணன் கலங்கி கொண்டிருந்தபோது அவன் கொடூர குரலில் சொன்னான்.
"ஒன்னுடைய சாப்பாட்டு பார்சலை கொஞ்சம் நகர்த்தி வைத்து கொள்கிறாயா. ரொம்ப சுடுது"

மூளைக்கு வேலை..


ஆமாம் கடைசியா நீங்க எப்போ உங்க மூளைக்கு வேலை கொடுத்தீங்க..
என்னது மூளைன்ன என்னவா?
அப்போ இந்த சமாச்சாரத்தை விட்டு விட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ளுங்கோ.. என்ன ஒகேவா?


ராஜாவுக்கு, ரோஜா மேல ஒரு கண்ணு..
எப்படி மடக்குரதுன்னு தெரியலே..
கணக்கு கேட்டு கணக்கு பண்ணலாம்னு முடிவு பண்ணி அவளிடம் இப்படி கேட்டான்.

எதை சேர்த்தால் 10 ம் 10000 ம் சரி சமமாகும்?
ரோஜா முழிக்க . யை முதலில் சேரு அதாவது .10 = .10000 = 1 ன்னு சொல்லி கெக்க பிக்கன்னு சிரித்தான்.

அப்படியா நான் இப்போ கேட்பதுர்க்கு நீ பதில் சொல்லுன்னு ரோஜா கேட்டாள்
வாரத்திலே உள்ள எதாவது மூன்று தேதிகளின் மொத்தத்தை சொல்லு. நான் நீ எதை தேர்ந்து எடுத்தேன்னு சொல்றேன். ஆனா அந்த தேதிகள் தொடர்ந்து வரக்கூடியதாக இருக்கோணும் அப்படின்னு சொன்னாள்.

ராஜா 45 ன்னு சொல்ல உடனே ரோஜா நீ தேர்ந்து எடுத்தது 14, 15, 16 ன்னு சொன்னாள். இப்போ ராஜா 69 ன்னு சொல்ல உடனே ரோஜா நீ தேர்ந்து எடுத்தது 22, 23, 24 ன்னு சொன்னாள்.

ஆமாம் அவள் எப்படி கண்டு பிடித்தாள்.


இந்தாங்க புடிச்சிக்குங்குங்கோ..

ரோஜா என்ன செய்தான்னா, ராஜா கொடுத்த கூட்டு தொகையை மூன்றால் வகுத்து 45/3 = 15. இதுதான் அந்த தேதிகளின் மத்திய தேதி. ஆக 14, 15, 16 ன்னு சொன்னாள். ராஜா 69 ன்னு சொன்ன போது 69/3 = 23 கணக்கு பண்ணி 22, 23, 24 ன்னு சொன்னாள்.

ஆமாம் நீங்க எங்க போறீங்க?
என்னது உங்க ஆளை கணக்கு பண்ணனுமா!!!