தட்டி கொடுத்த குங்குமத்திற்கு நன்றி.


அன்புத்தாயின் தீடீர் மறைவு என்னை நிலை குலைய வைத்தது. எப்பொழுதும் கும்மாளம், கிண்டல் கேலி என வாழ்க்கையின் சந்தோசங்களை அணு அணுவாக ருசித்த எனக்கு இது ஒரு மிக சிறந்த "Wakeup call" . இதனால் வலை உலகத்திற்கு கூட வராமல் இருந்து வந்தேன்.

என்னை தேடி இவ்வலை தளத்திற்கு வந்து ஏமாந்த அன்பு நெஞ்சங்கள் என்னை மன்னிப்பார்களாக. (யாரது அங்கே "இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தோம்" என குரல் கொடுப்பது")

இந்த நேரத்தில் எனது "தொண தொணக்கும் மனைவியை விற்க நினைத்தவர்" என்ற பதிவு சமிபத்திய குங்குமம் இதழில் வந்துள்ளது.

என்னை போன்ற சாதாரண பதிவர்களையும் அங்கீகரித்த குங்குமத்திற்கு என் இதயம் கனிந்த நன்றி. தளர்ந்த மனதிற்கு சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட சிறந்த டானிக்.
குங்குமத்தில் பூக்காதலன்

முதல் பகுதியிலேயே இடம் பிடித்த என் சக பதிவர்கள் சுறு சுறுப்பாய் பல சுவையான பதிவுகளை தரும் நண்பர் சோம்பேறி மற்றும் வலை உலகங்களால் "அண்ணாச்சி" என அன்புடன் அழைக்கப்படும் வடகரை வேலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அவங்களுக்கு முன்னால் நானெல்லாம் ஒரு ஜுஜுபீ.

2 நண்பர்கள் பூசை செய்றாங்கோ:

Raj said...

Congrats pookkathalan..

பூக்காதலன் said...

நன்றி ராஜ். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.