பதினாறும் பெற்று ...

தமிழர் திருமணங்களுக்கு சென்றால் நிச்சயமாக இந்த வாழ்த்து உங்களின் காதில் விழும். "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று.

சிறு வயதில் இப்படி வாழ்த்தை கேட்டால் "பதினாறு பிள்ளைகள் பெற சொல்றாங்களோ" என்று நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்ததுண்டு.

ஆமாம் இந்த பதினாறும் என்றால் என்ன? பதினாறு பேறு (செல்வங்கள்) என்பது மட்டும் தெரியும். ஆனால் இந்த செல்வங்கள்தான் என்ன. எனக்குள் தூங்கி இருந்த அந்த ஜேம்ஸ் பாண்டை எழுப்பி விட்டேன்.

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு போன பொது அப்படி சொல்லி மணமக்களை வாழ்த்திய ஒரு பெரியவரை பிடித்து கேட்டப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா. "பரம்பரை பரம்பரையாய் இப்படித்தான்பா வாழ்த்துறோம். முதியோர்கள் சொன்னால் நல்லதாகத்தான் இருக்கும். அதுக்கு காரியம் காரணம் எல்லாம் ஆராய கூடாது".

என்னடா இது பெரிய வம்பா போச்சு.. தெரிந்துக்கொள்ளலாம்னு கேட்டால் இப்படி சொல்லிட்டறேன்னு வருத்தம். ஆனாலும் "தனது முயற்சியிலிருந்து சிறிதும் தவறாத விக்கிரமாதித்தன் போல்" நானும் எனது ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.

அப்படி அலைந்த போதுதான், என் நண்பன் ஒருவன் திருநள்ளாறு கோவிலில் பார்த்ததாக இந்த போட்டோவை கொடுத்தான். இதில் அந்த பதினாறு செல்வங்களை பற்றியும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.

பணம் பொருள்தான் செல்வம் என நினைக்கும் இந்த காலத்தில் எது உண்மையான செல்வம் என்பதை. பாருங்கள் நம் முன்னோர்கள் எவ்வளவு அர்த்தப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள் என்று..

இந்த கட்டுரைக்கு காரணமாக இருந்த சித்தி முனிராவுக்கு நன்றி.


பிக் பாக்கெட்காரர்கள் இடமிருந்து மீட்க புதிய காலனி

இந்த காலத்தில் பிக் பாக்கெட்காரர்கள் ரொம்பவும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். எவ்வளவு மறைவான இடத்தில் வைத்திருந்தாலும் அதையும் சுலபமாக லவட்டி விடுகிறார்கள். அவர்களிடமிருந்து நம் பணத்தை எப்படித்தான் பாதுகாப்பது?

அதற்கு பதில் சொல்லத்தான் இந்த புதிய செருப்பு விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் கால்பகுதியில் ஒரு அறை உள்ளது அதில் நீங்கள் மிகவும் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் பொருளை (அதற்க்காக உங்க வீட்டையெல்லாம் இதனுள் வைக்க முடியாது) இதனுள் வைத்து விட்டால் போதும். உங்கள் பொருள் பாதுகாப்பாக இருக்கும் .

முக்கியாமாக ஒன்று சொல்ல மறந்து விட்டேனே.. இதை கல்யாணத்தில் வைத்துவிட்டு காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல..


போட்டோ அனுப்பிய சகோதரர் சித்திக்கிற்கு நன்றி.


பாப்கார்ன்

கைதொலைபேசிகளின் எண்ணிக்கை (அதாங்க இந்த செல்போன்) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அது இல்லை என்றால் சிலர் வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டது போல எண்ணுகிறார்கள்.

அப்படி வாழ்க்கையின் அங்கமாகி விட்ட இந்த கை தொலை பேசிகளை எப்படி பயன்படுத்துகிறோம்? சிலர் தங்களது கைப்பையில் வைத்து கொள்கிறார்கள். பலரோ தங்களது பேன்ட் பாக்கெட்டில் முக்கியமாக ஆண்கள். பேண்ட்டில் திரியும் இந்த நவ நாகரிக மங்கைகளும் இதில் அடக்கம். வேறு சிலரோ tie மாதிரி தொங்க விட்டுக்கொள்கிறார்கள். மிகவும் அவசியமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஹே என்ன சொல்ல வருகிறாய் என்று தானே கேட்கிறீர்கள். இதோ விசயத்திற்கு வருகிறேன்.

கை தொலைபேசியிலிருந்து வரும் கதிரியக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. முக்கியமாக அது உபயோகத்தில் இருக்கும் போது. அது எவ்வளவு மோசமானது என்பதை பின் வரும் வீடியோவில் காணுங்கள்.


புதிய வேகத்தடை சாதனம்

சாலைகள் எங்க பாட்டன் வீட்டு சொத்து என்று நினைத்து தாறுமாறாக வாகனம் ஓட்டுவதும், அதனால் அன்றாடம் சாலை விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது.

அதை பல நாடுகளில் பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வேகத்தடை கேமராக்கள், சாலை போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஆகியவை இவற்றுள் அடங்கும். அப்படியும் கட்டு கடங்காமல் திரிபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அவர்களுக்கானவ வேகத்தடை சாதனம்தான் நீங்கள் இங்கே காணப்போகும் விஷயம்.


இந்த குண்டும் குழியுமான சாலையில் யாருக்காவது மின்னல் வேகத்தில் செல்ல விரும்புவார்களோ?

.

.

.

.

எவ்வளவு புதுமையான செலவு குறைந்த வழி பாருங்கள்.