மாரடைப்பைத் தடுக்கும் இஞ்சி


சாப்பிடும்போது இஞ்சியை கடித்து விட்டால் அவசர அவசரமாக அதை வாயில் இருந்து வெளியில் எடுப்பவரா நீங்கள்? அப்படிஎன்றால் உடனே இந்த கட்டுரையை மேலே படியுங்கள். ஏனெனில் மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

"இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது." என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருக்கிறது.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆக இனிமேல் உங்களை யாரவது இஞ்சி தின்ற குரங்கு என்று சொன்னால் ஆத்திரப்படாதீர்கள். அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி

என்ன பூமியில் வாழ்ந்து போரடிக்கிறதா? செவ்வாய் கிரகத்திற்கு வர்றேங்களா என்று உங்கள் பயண முகவர் கேட்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. என்ன கதை உடுறான் என்று நெனைக்கதீங்கோ.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது என்பதற்கான முக்கிய ஆதாரமாக இதை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதை விரிவாக ஆராய அமெரிக்காவின் நாசா, பீனிக்ஸ் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது.பீனிக்ஸ் விண்கலம் அங்கு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. மே 25ம் தேதி பீனிக்ஸ் தரையிறங்கியபோது அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் தென்பட்டது. அது உப்பு அல்லது ஐஸ் கட்டியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதையடுத்து மேலும் 3 இடங்களில் பீனிக்ஸ் விண்கலம், மண்ணைத் தோண்டியபோது அங்கும் வெள்ளை நிறத்திலான பொருள் தென்பட்டது. தோண்டிய சிறிது நேரத்தில் இது சூரிய வெப்பத்தில் ஆவியாகி விட்டது. எனவே இது உப்போ அல்லது பாறையோ இல்லை, மாறாக ஐஸ் கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் இருக்கிறது என்பதற்கான மிக முக்கியஆதாரம் இது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதை வைத்து மட்டும் செவ்வாய் கிரகம், மனிதர்கள் வாழத் தகுதியான கிரகம் என்று கூறி விட முடியாது. உணவுப் பொருள் இல்லாத கிரகம், வாழத் தகுதியற்ற கிரகம் என்பது நாசா விஞ்ஞானிகளின் கருத்து. தொடர்ந்து ஆய்வு நடத்தி, செவ்வாய் கிரகத்தில் வேறு ஏதாவது கனிப் பொருட்கள் மறைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்யவுள்ளனர்.

செவ்வாயில் ஐஸ் கட்டிகள் இருப்பது தெரியவந்திருப்பதால், செவ்வாய் கிரக ஆய்வுகள் ஆர்வத்தை தூண்டியுள்ளன.

கொலஸ்ட்ரால் - குறைப்பது எப்படி ? - பாகம் ஒன்று


உடல் இளைக்க போரடுபவரா நீங்க..
என்ன செய்தாலும் ஒண்ணுமே பலன் இல்லையே என்று வருந்துபவரா நீங்க..
அப்படிஎன்றால் உங்களுக்காகதான் இந்த கட்டுரை
கொலஸ்ட்ரால் கொலஸ்ட்ரால் என்று சொல்லறாங்களே அது என்னன்னு முதலில் பாப்போமா?

கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு குடும்பத்தை சேர்ந்த வெள்ளையான மெழுகு போன்ற பொருள். இதுதான் நமக்கு தேவையான பல்வேறு ஹார்மோன்களை (estrogen) மற்றும் வைட்டமின் D போன்ற முக்கியமான தயாரிக்க உதவுது.

ஆமா இந்த கொலஸ்ட்ரால் எப்படி வருது என்று தானே கேட்குறீங்க.
நமக்கு கொலஸ்ட்ரால் இரண்டு விதமாக கிடைக்குது.
1. நம்முடைய உடம்புலேர்ந்தே உருவாக்கப்படுது. நம் கல்லீரல் (Liver) சுமார் 1000 மில்லிக்ரம் கொலஸ்ட்ரால் ஒரு நாளைக்கு உருவாக்குது.
2. நாம் சாப்பிடும் உணவிலிருந்து.. முக்கியாமா அசைவ உணவுகள், பால், முட்டை போன்றவைகள்.

முக்கியாம ஒன்னு காய்கறிகள், பழங்கள், இதுலல்லாம் கொலஸ்ட்ரால் கிடையாது.

சரி சரி மிச்சத்தை அப்புறம் பார்ப்போமா?
பசிக்குது.. பிரியாணி சாப்பிடனும்

போலி வெப்கேம்

ஏதாவது ஒரு மெசெஞ்சரில் சாட்டிங்கில் இருக்கின்றீர்கள்.உங்களிடம் வெப்கேமே இல்லை.எனினும் மறுமுனையில் இருப்பவரிடம் உங்களிடம் வெப்கேம் இருப்பது போல் பாவ்லா காட்டணுமா? அவர் போன்றோர்க்கு உதவுவது தான் இந்த போலி வெப்கேம். Fakewebcam


இந்த மென்பொருளை நிறுவிவிட்டு பின் அதில் ஒரு போலி வெப்கேம் வீடியோவை ஓட விட்டு விட்டால் மறுமுனை மனசு அதை உண்மையென்றே நம்பிவிடுமாம். டைப்புவதில் மட்டும் அல்ல வெப்கேமில் தோன்றுபவரிலும் பொய் இருக்கலாம்.

யாராவது அழகான பெண்ணிடம் சாட் செய்கிறோம் என்று நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தால் எதற்கும் உசாராயிருங்கள். அது போலி வெப்கேமாக இருக்கலாம்.

குவைதில் புழுதி புயல்

புழுதி சுனாமி !!

வாங்கப்பா எல்லோரும் இந்த பஸ்ஸில் ஏறி ஓடி போயிடலாம்

நீங்க எல்லாம் மூக்கை மூடிக்கொங்கோ.. இதல்லாம் என்னக்கு சகஜம்பா (பாருங்க எப்படி ஸ்டைல் - ஆ போஸ் கொடுக்குறதை..)

நீங்கல்லாம் மூக்கை மூடிக்கலாம்.. நாங்க??


ஆமா இந்த புழுதியிலும் எப்படி இவங்க கார் ஒட்டி செல்ராங்க்லோ ?

ஒரு பறவை பார்வை.



நடுநிசி பயங்கரம்


நடுநிசி ஊரே வெறிச்சோடி கிடந்தது. அக்கம் பக்கம் யாருமில்லை.
பக்கத்தில் இருந்த மின்விளக்கும் இப்பொழுது அணைந்து விடுவேன் என பயமுறித்தி கொண்டிருந்தது. கண்ணனுக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் தைரியமும் போய் கொண்டிருந்தது. "இந்த நேரத்தில் வெளியில் போகதடா. அப்படி போனாலும் முக்கியமாக கோயில் பக்கம் நிற்காதே" என்று அம்மா சொன்னார்.

இந்த பாழா போற வயிற்று பசி இந்த நேரத்தில்தான் வரணுமா? அதுவும் அம்மா எதாவது செய்து தரேன் என்று சொல்லியும் கேட்காமல் இவ்வளவு தூரம் வந்தேனே.. அதுவும் இந்த ஸ்டுபிட் பைக் பாதியில் இப்படி மக்கர் செய்து விட்டதே. யாராவது வந்தாலும் லிப்ட் கேட்கலாம் ஆனால் இங்கு ஈ எறும்பு கூட காணோமே என்று கவலைப்பட்டு கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து ஒரு மோட்டார் சைக்கிளில் யாரோ வருவது போல இருந்தது. நல்ல வேலை இவரிடம் எப்படியாவது லிப்ட் கேட்டு இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்து கொண்டான்.

லிப்ட் கேட்க கையை நீட்ட அந்த பைக் நின்றது. அந்த ஆள் பார்ப்பதற்கு கொடுரமாக இருந்தான். "என்ன வேண்டும்?" கொடுர குரல். என்ன செய்வது வேறு வழி இல்லை எப்படியாவது இங்கிருந்து போனால் சரி என்று அவரிடம் பேசி அவர் வண்டியில் சென்றான்.

பாதி வழியில் செல்லும் பொழுது "ஈ உம்" என்று பல்வேறு விதமான ஒலிகள் ஒட்டுபவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. சாதரணமாக வண்டியை ஒட்டாமல் நெளித்து நெளித்து வேறு வண்டி ஒட்டிக்கொண்டிருந்தான். தப்பான வண்டியில் ஏறி விட்டோமே என்று உயிரை பிடித்து கொண்டு கண்ணன் உட்கார்ந்து கொண்டிருந்தான். வண்டி கோயிலுக்கு அருகே வந்தவுடன் திடீர் என சடர்ன் பிரேக் அடித்து வண்டியை நிப்பாட்டினான். இன்று நாம் தொலைந்தோம் என்று கண்ணன் கலங்கி கொண்டிருந்தபோது அவன் கொடூர குரலில் சொன்னான்.
"ஒன்னுடைய சாப்பாட்டு பார்சலை கொஞ்சம் நகர்த்தி வைத்து கொள்கிறாயா. ரொம்ப சுடுது"

மூளைக்கு வேலை..


ஆமாம் கடைசியா நீங்க எப்போ உங்க மூளைக்கு வேலை கொடுத்தீங்க..
என்னது மூளைன்ன என்னவா?
அப்போ இந்த சமாச்சாரத்தை விட்டு விட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ளுங்கோ.. என்ன ஒகேவா?


ராஜாவுக்கு, ரோஜா மேல ஒரு கண்ணு..
எப்படி மடக்குரதுன்னு தெரியலே..
கணக்கு கேட்டு கணக்கு பண்ணலாம்னு முடிவு பண்ணி அவளிடம் இப்படி கேட்டான்.

எதை சேர்த்தால் 10 ம் 10000 ம் சரி சமமாகும்?
ரோஜா முழிக்க . யை முதலில் சேரு அதாவது .10 = .10000 = 1 ன்னு சொல்லி கெக்க பிக்கன்னு சிரித்தான்.

அப்படியா நான் இப்போ கேட்பதுர்க்கு நீ பதில் சொல்லுன்னு ரோஜா கேட்டாள்
வாரத்திலே உள்ள எதாவது மூன்று தேதிகளின் மொத்தத்தை சொல்லு. நான் நீ எதை தேர்ந்து எடுத்தேன்னு சொல்றேன். ஆனா அந்த தேதிகள் தொடர்ந்து வரக்கூடியதாக இருக்கோணும் அப்படின்னு சொன்னாள்.

ராஜா 45 ன்னு சொல்ல உடனே ரோஜா நீ தேர்ந்து எடுத்தது 14, 15, 16 ன்னு சொன்னாள். இப்போ ராஜா 69 ன்னு சொல்ல உடனே ரோஜா நீ தேர்ந்து எடுத்தது 22, 23, 24 ன்னு சொன்னாள்.

ஆமாம் அவள் எப்படி கண்டு பிடித்தாள்.


இந்தாங்க புடிச்சிக்குங்குங்கோ..

ரோஜா என்ன செய்தான்னா, ராஜா கொடுத்த கூட்டு தொகையை மூன்றால் வகுத்து 45/3 = 15. இதுதான் அந்த தேதிகளின் மத்திய தேதி. ஆக 14, 15, 16 ன்னு சொன்னாள். ராஜா 69 ன்னு சொன்ன போது 69/3 = 23 கணக்கு பண்ணி 22, 23, 24 ன்னு சொன்னாள்.

ஆமாம் நீங்க எங்க போறீங்க?
என்னது உங்க ஆளை கணக்கு பண்ணனுமா!!!



தேன்.. தேன். தித்திக்கும் தேன்..


தேன் மிகச் சிறந்த உணவுப் பொரு-ளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.


ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சி-யால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
அதிகாலை-யிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.


நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்த-வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.


சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனை-யாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.


நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டு-விட்டால் உடம்பு அவ்வளவுதான்.


ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.


மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.


படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.


ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.


இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்-போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.


சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசி-யின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்-குழாய் தொடர்பான சில தொல்லை-கள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங் டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.


இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை


நன்றி: குமுதம்