தொண தொணக்கும் மனைவியை விற்க நினைத்தவர்


திருமதிகளின் தொண தொணப்பு என்பது திருமண வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று.

சில திருமதிகளுக்கு தொண தொணக்கா விட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. இவர்களெல்லாம் தமது துணைவனை அடக்கி ஆள நினைப்பவர்கள்.

சில துணைவர்களுக்கோ, தன் மனைவி ஏதும் சொல்லவில்லை என்றால் ஏதோ ஒன்று தொலைந்தது போல் கவலை கொள்வர். தொண தொணப்பாவது பரவாயில்லை, வேறு எதுவும் நடந்து விடுமோ என்ற கவலை அவர்களுக்கு.

ஆனால் இந்த தொண தொணப்பு ஒரு அளவோடு இருக்க வேண்டும். இல்லையென்றால்..

லண்டனில் நடந்த ஒரு சம்பவம். 38 வயது கேரி பய்த்ஸ் (Gary bates) என்பவர், தனது 40௦ வயது துணைவி டோன்னாவுடைய (Donna) தொண தொணப்பு தாங்க முடியாமல் இவ்வாறு பத்திரிகையில் விளம்பரம் செய்தார்.

தொண தொணக்கும் மனைவி
வரி இல்லை.
அதிக பாதுகாப்புக்கு செலவு - சிறிது துருவுடன்.

இதில் முக்கியமான் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு திருமணம் சென்ற ஆண்டுதான் நடந்ததாம்.

கொடுமை என்ன வென்றால் சுமார் இதுவரை பத்து பேர் அவருக்கு தொலை பேசி "அவர் இன்னும் உங்களிடம் இருக்கிறாரா?" என்று கேட்டார்களாம்.

பூவ. பூவ. பூவ.. பூவே..


டிஸ்கி: நம்ம நண்பர்கள் ரகு, சிவா, ஜீவா - இவர்கள் எப்பொழுது தொல்லைபேசினாலும் கேட்கும் கேள்வி - ஏன் உன் வலை பெயரை பூக்காதலன் என்று வைத்தாய் என்று.

ப்லொக்கிற்கு வந்து , ஒரு கமெண்ட் கூட போடாம போறதில்லாமல் கேள்வி வேற இதில. இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா.

ஓகே கொசு மருந்து அடிக்கும் நேரம்.

சிறு வயதிலிருந்தே பூக்களை கண்டால் ஒரு காதல். ஜவர்ஹர்லால் நேருவின் வரலாறை கேட்டபின், ரோஜாப்பூவை சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்கு செல்வேன்.

அதற்காக ரோஜா வாங்க அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கி செல்வேன். காசு கிடைக்காத நேரத்தில் ரோட்டோர பூக்கள் தான் எனக்கு ரோசாப்பூ.

அப்படி பூக்களின் மேல் காதல் கொண்டு பூபாளம் பாடி திரிந்த நாளது.

வாலிப வயது வந்தும் அந்த ஆசை விடவில்லை.
எங்கு பூவை பார்த்தாலும் அதில் மயங்கி சில நேரம் அங்கேயே இருந்து விடுவேன்.

என்னமோ தெரியலே.
கள்ளம் கபடமற்ற வண்ண வண்ண பூக்களை பார்க்கும் பொழுது மனது அனைத்தும் மறந்து உற்சாகத்தில் சிரிக்கிறது.

என்னை விரும்பியவர்களும், நான் விரும்பியவரின் பெயரும் கூட பூ பெயரோடு அமைந்ததால் பூக்களின் மேல் உள்ள காதல் தொடர்கிறது.

புகைப்படமும் புது கவி பாடும்.

புகைப்படம் எடுப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒன்றி விட்ட ஒன்று.


நான் சிறுவனாக இருந்த பொழுது புகைப்படம் எடுக்கணும் என்றால் "மொட்டை மாடிக்கு போங்கடா அங்குதான் நல்ல வெளிச்சம் வரும்" என்று அம்மா சொல்வார்கள். ஏனென்றால் அந்த கேமராவில் பிளாஷ் வசதி கிடையாது. இத்தனைக்கும் அது ஒரு சிங்கப்பூர் கேமரா.

அந்த காலமெல்லாம் போய் இப்பொழுது வண்ணமயமாக கை அடக்க கேமரா எல்லாம் புழக்கத்தில் வந்து விட்டது.

மேலும் அதனை கொண்டு கவிதை பாட வைக்கும் புகைப்படங்கள் எல்லாம் எடுக்கிறார்கள். இதோ சாம்பிள்.


நான் எங்கு சென்றாலும் நீ என்னோடு தான்



ஏனென்றால் உன்னிடம் உள்ளது தீ..


நீ முகத்தை மறைத்தாலும் உன் உருவம் என்றும் மறையாது.


சூரியன் சுட்டு விடும் தூரம் தான்.

அப்படி இருக்க உன்னை காண இதோ நான் சிறகடித்து பறக்கிறேன்.



உன்னை நேரிலும் இப்படி ... (சென்சார் செய்யப்படுகிறது..)