பூவ. பூவ. பூவ.. பூவே..


டிஸ்கி: நம்ம நண்பர்கள் ரகு, சிவா, ஜீவா - இவர்கள் எப்பொழுது தொல்லைபேசினாலும் கேட்கும் கேள்வி - ஏன் உன் வலை பெயரை பூக்காதலன் என்று வைத்தாய் என்று.

ப்லொக்கிற்கு வந்து , ஒரு கமெண்ட் கூட போடாம போறதில்லாமல் கேள்வி வேற இதில. இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா.

ஓகே கொசு மருந்து அடிக்கும் நேரம்.

சிறு வயதிலிருந்தே பூக்களை கண்டால் ஒரு காதல். ஜவர்ஹர்லால் நேருவின் வரலாறை கேட்டபின், ரோஜாப்பூவை சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்கு செல்வேன்.

அதற்காக ரோஜா வாங்க அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கி செல்வேன். காசு கிடைக்காத நேரத்தில் ரோட்டோர பூக்கள் தான் எனக்கு ரோசாப்பூ.

அப்படி பூக்களின் மேல் காதல் கொண்டு பூபாளம் பாடி திரிந்த நாளது.

வாலிப வயது வந்தும் அந்த ஆசை விடவில்லை.
எங்கு பூவை பார்த்தாலும் அதில் மயங்கி சில நேரம் அங்கேயே இருந்து விடுவேன்.

என்னமோ தெரியலே.
கள்ளம் கபடமற்ற வண்ண வண்ண பூக்களை பார்க்கும் பொழுது மனது அனைத்தும் மறந்து உற்சாகத்தில் சிரிக்கிறது.

என்னை விரும்பியவர்களும், நான் விரும்பியவரின் பெயரும் கூட பூ பெயரோடு அமைந்ததால் பூக்களின் மேல் உள்ள காதல் தொடர்கிறது.

2 நண்பர்கள் பூசை செய்றாங்கோ:

Flower Power said...

Who is the person that loved you.
Now the cat is out of the bag.

பூக்காதலன் said...

அச்சச்சோ. உனக்கு வேறு தெரிஞ்சு போச்சா..?